தினம்–தினம் லஞ்சக் கைதுகள் திராவிட பாரம்பரியமா, திராவிடத்துவமா, திராவிட மாடலா, எது? (3)
17-04-2023 – வீடு கட்ட அனுமதி: கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகதெரிகிதறது[1] . இதனால் மன உளைச்சலடைந்த பரணி கடலூர் லஞ்ச ஓழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்[2]. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை பரணியிடம் வழங்கி அதிகாரிளிடம் வழங்க கூறினார்கள். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த பரணி, ஊழியர் ரகோத்தமனிடம் பணத்தை கொடுத்தார். இதனை வாங்க மறுத்த ஊழியர், அருகில் உள்ள தனியார் கட்டுமான அலுவலக உரிமையாளரை பார்த்து அவரிடம் பணம் கொடுக்க கூறினார். தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்திடம் சென்ற பரணி, ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் ரகோத்தமனையும் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல துறைகளில் லஞ்சம் இருக்கிறது: இப்படியாக, ஒவ்வொரு நாளும் தாலுகா அலுவலகம், வட்டாட்சியாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ, பதிவாளர், மின்சாரம், கார்பொரேஷன், குடிநீர்-கழிவுநீர் துறை, ரேஷன் கார்ட், திருமணப் பதிவு என்று பல அலுவலகங்களில் தினம்-தினம் லஞ்சம் கேட்டு வாங்கப் படுகிறது. அரசு மருத்துவ மனை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியவையும் விதிவிலக்கல்ல. லஞ்சம் நிருவனப்படுத்தப் பட்ட நிலையில் செயல்பட்டு வருகிறது. இவையெல்லாம் தினமும் கோடிக் கணக்கில் பொது மக்கள் வந்து செல்லும் இடங்கள். இவற்றைத் தவிர பற்பல துறைகள், லுவலகங்கள் எல்லாம் இருக்கின்றன. அங்கெல்லாமும் லஞ்சம் சகஜமாக இருக்கிறது. லட்சத்தில் ஒருவர் யோக்கியவானாக இருக்கிறார். மற்றபடி 90% லஞ்சப் பேர்வழிகளாகத்தான் இருக்கிறார்கள். பல இடங்களில், மூஞ்சிகளைப் பார்த்தாலே, காசு கொடுக்காமல், இந்த ஆளிடம் எதுவும் நடக்காது எனூ தெரிந்து கொள்ளலாம். பிறகு அவர்கள் பேசும் பேச்சு, கேட்கு கேள்விகள் முதலியவற்றை வைத்தும் கண்டு கொள்ளலாம். ஏஜென்டுகள், அசிஸ்டென்டுகள் போன்றவர்களும் விவரங்களை சொல்வர். ஆக, தினம்-தினம் இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன.
லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே: சமீபத்தில் தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே என்று வெளியிட்டு வருகிறது[3].
- வரைபட அனுமதி (ச.அடி) – 60-100
- வர்த்தக நிறுவனங்கள் (ச.அடி) – 80
- அடுக்குமாடி குடியிருப்பு (ச.அடி) – 100
- நில உபயோகம் வகைமாற்றம் (ஏக்கருக்கு) – 3 – 5 லட்சம் வரை
- நில அளவை பதிவேடு நகல் பெற – 2,000 – 3,000
- சர்வேயர் அறிக்கை – 10,000
- பட்டா பெயர் மாறுதலுக்கு –
- வி.ஏ.ஓ., அலுவலகம்; 5,000.
- தாலுகா அலுவலகம்; 5,000-10,000.
- மாநகராட்சியில் – வரைபட அனுமதி (ச.அடி); 20.
- வர்த்தக நிறுவனம் (ச.அடி); 35.
- சொத்து வரி (ச.அடி) – 50
- சொத்து வரி பெயர் மாற்றம் – 5,000
- லே-அவுட் அப்ரூவலுக்கு (ஏக்கருக்கு) – 6,00,000
- குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு – 50,000
- பிறப்பு, இறப்பு சான்று – 2,000
- தொழில் உரிமம் – 2,000 – 5,000
இவற்றை மறுத்து எந்த துறை அதிகாரிகளோ, ஊழியர்களோ மறுக்கவில்லை. திரைப் படங்களில் கூட லஞ்சம் வாங்கும் முறைப் பற்றி விளக்கப் பட்டுள்ளது.
- சமீபத்தில் தினமலர் “லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே” என்று லஞ்சம் பற்றி தொடர்ச்சியாக விவரங்களை வெளியிட்டு வருகிறது!
- இதெல்லாமென்ன பெரிய ரகசியமா, விசயமா, இதையெல்லாம் போட்டு என்னவாகப் போகிறது, கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்குமா?
- பேஸ்புக்கில் இருப்பவர்களே கண்டுகொள்வதில்லை, ஏனெனில் அவர்களும் அத்தகைய நிலையில் அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க விடுகிறார்கள்!
- அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசமாட்டார்கள், யோக்கியவான்களாக ஜால்றா அடித்து பிழைப்பு நடத்துவர்! விரும்பத்தான் செய்வார்கள்!
- வியாபாரக் கொள்ளை, வணிகத் திருட்டு, வாங்கல்-விற்கல் ஆதாயம், கொடுப்பது-எடுப்பது பலன், லாபம் என்றால் இனிக்கத்தான் செய்யும்.
- பரிசு கொடுத்தால், ஊசி போடும் டாக்டர் கூட முன்னுரிமைக் கொடுக்கிறார், காசு கொடுத்தால் அடிபட்டவர்களையும் விடுத்து அடித்தவனை முதலிலேயே அழைக்கிறார்!
- பணத்தை வேகமாக, இப்பொழுதே, எங்கு வேண்டுமானாலும், எப்படியாவது, சம்பாதித்து விடவேண்டும் என்கிறவன், எந்த தர்மத்தையும் பார்ப்பதில்லை!
- ஆனால் அவன் தான் யோக்கியன் போல கடவுள், தத்துவம், ஆசாரம், புனஸ்காரம், ஒழுக்கம் என்றெல்லாம் பேசுவான்!
- ஆக இத்தகைய கூட்டுக் கொள்ளை சித்தாந்தத்தை நியாயப் படுத்தும் போது, அதுவும் அரசியலால் இந்துத்துவம் ஆகிறது! அடுத்தவனும் உபயோகப் படுத்துகிறான்!
- “ஜெய் பஜரங்க பலி” கோஷத்தின் பிறழ்சியும் ஊழல்தான், வெற்றி-தோல்விகளை ஆதரிப்பவர் இந்துத்துவ-விரோதிகள் தான்! இந்துவிரோதிகளாகவும் மாறும் பொழுது விபரீதமாகிறது!
உண்மையான இந்து லஞ்சம் வாங்க மாட்டான்: ஆகவே, இந்துக்களுக்கு லஞ்சத்தை, ஊழலை ஒழிக்க வேண்டிய கடமை, தார்மீகம் உள்ளது. நிச்சமாக, ஒரு நல்ல இந்து லஞ்சம் வாங்க மாட்டான். தனது வேலையை, கடமையாக செய்து கொடுப்பான். இன்னும், ஒரு அல்லது பல படிகள் தாண்டியும் உதவி செய்வான். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வான். அத்தகையவன் ஒழுக்கமாக, கண்டிப்பாக இருப்பான். தனது குடும்பத்தவர், உற்றோர் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான். “இவன் பிழைக்கத் தெரியாத ஆள்,” என்று ஏளனம் செய்வோரும் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், சமூகத்தில் நிச்சயமாக அவன் தான் யோக்கியன், நியாயவான், தர்மவான், ….இவனைப் போன்றவர்களும் 130 கோடி இந்துக்களில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்துமதம் நிலைத்து வாழ்கிறது. பலகோடி மற்ற இந்துக்களும் பலன் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
© வேதபிரகாஷ்
17-05-2023
[1] மாலைமலர், ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது, By மாலை மலர், 18 ஏப்ரல் 2023 2:55 PM..
[2] https://www.maalaimalar.com/news/district/cuddalore-municipal-corporation-employee-arrested-for-taking-rs20-thousand-bribe-598217?infinitescroll=1
[3] தினமலர், லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (24), பதிவு செய்த நாள்: மே 15,2023 10:10