Posts Tagged ‘Rajeev Agarwal’

ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்கள் மீது ஐ.பி.சி 120 (b), 409 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன!

ஒக்ரோபர் 22, 2011

ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் .பி.சி 409, 420 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன!

 

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்-யார்: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 120(b), 409 பிரிவுகளில் ( Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409) குற்றஞ்சாட்டனர்[1], இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது[2].

  1. ஏ. ராஜா – முந்தைய டெலிகாம் அமைச்சர் [A. Raja]
  2. கனிமொழி, ராஜ்ய சபை அங்கத்தினர்  [A.  Kanimozhi]
  3. ஆர். கே. சந்தோலியா முந்தைய டெலிகாம் அமைச்சரின் காரியதரிசி [R K Chandolia, the minister’s former Private Secretary ],
  4. சித்தார்த் பெருஹா [Siddhartha Behura ,former Telecom Secretary] ,
  5. சரத் குமார் [DMK-run Kalaignar TV’s MD Sharad Kumar],
  6. கரீம் மொரானி [Bollywood filmmaker Karim Morani]
  7. கௌதம் தோஷி [Reliance Anil Dhirubhai Ambani group’s executives Gautam Doshi],
  8. ஹரி நாயர் [Hari Nair (Reliance)]
  9. சுரேந்திர பிபரா [Surendra Pipara].
  10. ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் [telecom firm Reliance Telecom Ltd],
  11. ஸ்வான் டெலிகாம் [Swan Telecom]
  12. யூனிடெக் (தமிழ்நாடு) [Unitech (Tamil Nadu) Wireless Ltd],
  13. சாஹித் உஸ்மான் பல்வா [Swan Telecom promoter Shahid Usman Balwa],
  14. ஆசிஃப் பல்வா [Asif Balwa]
  15. ராஜிவ் அகர்வால் [Rajeev Agarwal],
  16. சஞ்சய் சந்திரா [Unitech Ltd’s MD Sanjay Chandra] மற்றும்
  17. வினோத் கோயங்கா [DB Realty MD Vinod Goenka].

 

நீதிபதி சி.பி.ஐ பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்: தில்லி பாட்டியாலா ந் ஈதிமன்றத்தின் நீதிபதி, ஓ.பி.சைனி மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதே குற்றம் நடந்துள்ளது நன்றாகவே தெரிகிறது என்று சி.பி.ஐ 17 நபர்களின் மீது பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்[3]. ராஜா மற்றும் காரியதரிசி சித்தர்த் பெருஹா ஐ.பி.கோ பிரிவு 409ன் கீழ், அரசாங்க ஊழியர்களக இருந்து கொண்டு ஏமாற்றியதாக – “நம்பிக்கைதுரோகம்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, 420 (ஏமாற்றுதல், மோசத்தனமாக சொத்தை விற்க / கொடுக்கத் தூண்டுதல்),  120(B), 468 (ஏமாற்றுவதற்காக கள்ள ஆவணங்களை உருவாக்குவது), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11 பிரிவுகளில் அவர்கள் செய்துள்ள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[4]. இக்குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால், ஆயுள் தண்டனையிலிருந்து ஏழாண்டுகள் சிறைதண்டனை, அபராதம் முதலியவை செல்லுத்த வேண்டியிருக்கும்[5].

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவகாசம் கேட்டனர்: 700 பக்கங்களுக்கும் மேலாக உள்ள குற்றப்பதிவு ஆணையில், குற்றம் எவ்வாறு நடந்தது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை எவ்வாறு செய்தார்கள், தங்களது பதவிகளை-அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தனர், கள்ள ஆவணங்களை உருவாக்கினர், லஞ்சம் / ஆதாயம் கொடுத்தனர் – வாங்கினர் என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ கொடுத்து பதிவு செய்துள்ளது. நீதிபதி அதை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரியபோது, 700 பக்கங்கள் உள்ள குற்றச்சாட்டு ஆணையை முதலில் படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என்று கோரினர்[6]. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அந்த குற்றங்களை மறுக்கவில்லை, மாறாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளனர்.

கருணாநிதி சோனியாவுடன் பேசியது என்ன? இத்தனை நாட்கள் ஆகியும் பைல் கொடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனல், ஏற்கெனெவே உச்சநீதி மன்றம் சொல்லியுள்ள படி, அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். கோர்ட்டில் ராஜாத்தி அம்மாள் இருக்கிறார். கனிமொழியின் கணவர், மகன் முதலியோரும் இருக்கின்றனர். நேற்று கருணாநிதி, சோனியாவைப் பார்த்து பேசிய்ருக்கிறார். ஆனால், இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியாது அல்லது வேண்டாம் என்று முடிவு செய்திருப்பர் போலத் தோன்றுகிறது. சாஹித் பல்வா, கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால், ஆர்.கே. சந்தோலியா, சரத்குமார், சித்தார்த்த பெருஹா முதலியோரும் கம்பெனி அதிகாரிகளும் பிரிவு 192ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்[7]. எனவே ரிலையன்ஸ் போன்ற கம்பெனி தனது அரசியல்-பணம்-அதிகாரங்களை வைத்துக் கொண்டு சும்மாயிருப்பார்களா என்று தெரியவில்லை.

சட்ட அமைச்சரின் மறுப்பு, கட்சிகளின் நம்பிக்கையின்மை: குஷித் ஆலம் கான் என்ற சட்ட அமைச்சரை, குற்றாச்சாட்டு டீர்ப்பைப் பற்றி கேட்டபோது, அதைப் பற்றி தான் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, சட்டப்படி நடக்கும், என்று சொல்லி நழுவி விட்டார். இவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு இழுக்குதானே என்று அவர்கள் வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. பி.ஜே.பி நீதிமன்றம் வேகமாக செடல்பட வேண்டும், குற்றங்கள் மெய்ப்பிக்கப் பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றது. காலந்தாழ்த்தினால், நிச்சயமாக என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆதர்ஷ வழக்கில் ஆவணங்களே காணாமல் போய்விட்டன[8]. காங்கிரஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று மக்களுக்குத் தெரிந்ததே. சமீபத்தில் வரை குட்ரோச்சியைப் பிடிக்காது தூங்கி, அவனைத் தப்பிக்க வைத்து, போஃபோர்ஸ் வழக்கை சாகடித்து சமாதி கட்டி விட்டனர். முன்பு, நகர்வாலாவை மர்மமான முறையில் சாகடித்து “நகர்வால வழக்கை” மூடிவிட்டனர்[9], மக்களும் மறந்து விட்டனர். அதுபோல, இதனையும் இழுத்தடித்தால், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், ஏற்கெனெவே 4-5-6 ஆண்டுகள் இருந்துவிட்டனர், என்று வழக்கைத் திசைத் திருப்பி முடித்து விட்டால், கோடிகணக்கில் சுருட்டியதை வைத்துக் கொண்டு சாகும் வரை சுக-போகத்துடன் வாழ்வர். ஆனால், மக்கள் தாம் ஏமாளிகள் ஆவார்கள்.

வேதபிரகாஷ்

22-10-2011


[1] All the other 14 accused that have charged under Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409.

[4] Raja and Behura have been charged not only under Section 409 but also Sections 420 (cheating and dishonestly inducing delivery of property), 120(B), 468 (forgery for purpose of cheating), Sections 7 and 11 of Prevention of Corruption Act.

[7] The corporate executives and bunisess tycoons have been slapped with Indian Penal Code Section 192 (falsification of charges) as well.

[8] Even as the CBI registered an FIR against 13 people involved in the Adarsh society dispute on Saturday, the crime branch proposed to conduct a narco-analysis on four urban development department clerks, including a woman, to trace the important papers that went missing from the Adarsh file in November, 2010.

http://articles.timesofindia.indiatimes.com/2011-01-30/mumbai/28368189_1_crime-branch-narco-test-clerks

[9] Nagarwala case was involved with some 60-65 lakhs, but now the 2G corruption reportedly involves 1,75,000 crores and so on!

http://www.indianexpress.com/news/nagarwala-case-mystery-returns-after-three/400972/