சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்!
கோடிகளில் பணம் – முன்னேறும் தமிழகம்! தமிழகத்தில், லட்சக்கணக்காக ருபாய் நோட்டுக் கட்டுகள் பிபடுவது போய், இப்பொழுது, கோடிகளில் பிடிக்கப்படுவது ஆச்சரியமே! இந்த விஷயத்தில் தமிழகம் முன்னேறிவிட்டது எனலாம். கே.என். நேருவின் நண்பருக்கு / உறவினருக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து, ரூ. 5.11 கோடி ரூபாய் திருச்சியில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவர் அதை – அதாவது அந்த பணம் தமது உறவினர்களுடையது என்று, சில ஊடகங்களில் வெளிவந்துள்ளதை – மறுத்துள்ளார்[1]. இதற்குள் வருமான வரித்துறையினர் உதயகுமார் என்ற அந்த நபரின் இல்லத்திலும் சோதனை நடத்தினர்[2]. இப்படி கட்டுக்கட்டா ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கில் வைத்திரிந்தால், சாதாரண மக்கள் என்ன செய்வது?
சென்னையிலிருந்து நள்ளிரவில் புறப்பட்ட பஸ்ஸில் கோடிக்கணக்கானப் பணம்: திமுக அமைச்சர் தம்பியின் நெருங்கிய நண்பருக்கு / அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார்[3] என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் இருந்து வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்யப்படுவதற்காக வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படும் ரூ.5.11 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்[4]. நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற எம்.ஜே.டி என்ற தனியார் ஆம்னி பேருந்து திருச்சி பொன்னகரில் நிறுத்தப் பட்டிருந்தது. இது கே.என்.நேருவின் உறவினர் உதயகுமரன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது[5]. நேற்று நள்ளிரவில் இந்தப் பேருந்தில் பணம் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து, திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கீதா, போலீஸார் துணையுடன் சோதனை மேற்கொண்டார்.
தகவலின் பேரில் சோதனை – பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக திருச்சி பொன்நகர் பகுதியில் ஆம்னி பஸ் ஒன்றில் பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமை யிலான பறக்கும் படையினர் இன்று அதிகாலை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு ஆம்னி பஸ் ஒற்றின் மேல் பகுதியில் 5 பைகளில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த 5 பைகளிலும் மொத்தம் ரூ.5.11 கோடி மதிப்புள்ள பணக்கட்டுக்கள் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது[6]. அந்தப் பணம் முழுவதும் வங்கி ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டு வங்கி முத்திரையுடன் இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வருமான வரித்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது:. தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்ட ஆம்னி பஸ் அதன் உரிமையாளர் வீட்டின் எதிரிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. பணப் பறிமுதல் தொடர்பாக உரிமையாளர் உதயகுமார் வீட்டிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இன்று பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் 10 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[7]. ஆம்னி பஸ்சில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேதபிரகாஷ்,
05-04-2011
[2] http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/tamil-nadu/Poll-officials-seize-Rs-511cr-from-atop-bus-in-Tiruchi-money-meant-to-bribe-voters/articleshow/7873403.cms
[5] http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82.5+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&artid=400873&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest