Archive for the ‘திமுக’ Category
மே 25, 2011
கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை!
சோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].

கனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.

ஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].

மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].

சோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா? கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.
ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.
கனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.
ஜாமின் எப்போது? நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].
இந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும். |
சென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].
கனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.
[10] “If you have a daughter and if she is punished for no mistake, how will you feel? That’s the way I feel,” he told reporters, a tinge of sadness evident on his face.
குறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி
அமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 23, 2011
சி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு!
தாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன்? தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
தாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா? அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.
The following is the number of companies from each country which are under the ED scanner and the amount of money pumped into India from there as per the summary of investigation[5]:
Mauritius : 17 investment companies and banks: Rs. 7,911 crore
Japan: 7 companies and banks (Rs. 98.33 crore)
China: 6 companies and banks (Rs. 5,223 crore)
Finland: 5 companies (Rs. 1,185.9 crore)
Sweden: 2 companies (Rs. 430.34 crore)
France: 2 companies (Rs. 93.9 crore)
Russia: 2 companies (Rs. 2,518 crore)
சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே!
தாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
தாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].
எடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.
வேதபிரகாஷ்
23-03-2011
[9] DB Realty’s Mr Balwa has moved Delhi High Court questioning the MHA’s restrictions on his business activities by linking him with Dawood Ibrahim. Mr Justice S Murlidhar of the HC has directed MHA and other agencies ~ CBI and ED ~ to file their replies by 7 March. Following this HC directive, the CBI has decided to delve deeper into business transactions as well as its connections.
http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=357949&catid=40
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 18, 2011
சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)
குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா? 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.
தற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா? “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.
2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.
4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.
மதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:
இந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.
சி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.
செல்போன் விவரங்கள் என்ன? நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும்? அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா? சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா? விசாரிப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.
வேதபிரகாஷ்
18-03-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்
அடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 8, 2011
ஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்! (2)
ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரியது! சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
இந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும்? இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே! மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ? இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.
காசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.
ஜெயலலிதாவுடன் தொடர்பா? கோடிக்கணக்கில் கருப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].
ஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு மெத்தனமாக இருக்கிறதா? ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.
காசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:
- 1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.
- பிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
- ஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.
- கசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.
- அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.
- அலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.
பிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].
வேதபிரகாஷ்
08-03-2011
[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=387045&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
[4] The Enforcement Directorate (ED), the agency that investigates economic crimes in India, has secured a stay from the Bombay high court on a sessions court order asking it to return the passport of Switzerland-based hotelier Philip Anandraj, a claimed accomplice of Hasan Ali Khan, the Pune-based stud farm owner allegedly involved in laundering $8 billion (about Rs34,750 crore). Posted: Sat, Aug 23 2008. 12:30 AM IST
http://www.livemint.com/2008/08/22234938/ED-gets-stay-from-Bombay-HC-on.html
[5] According to Anandraj’s lawyer, P. Janardhan, his client has not committed any offence. “In 2003, my client (Anandraj) introduced Khan to the owner of a hotel in Lucerne in Switzerland that Khan wanted to buy,” he said. “Negotiations took place but the deal was not struck as there was no money in Khan’s (bank) account.” Janardhan also alleged that Khan borrowed $500,000 from Anandraj but never returned the money. “In 2006, when Anandraj came to India to get his money back, ED seized Anandraj’s passport and laptop, which had details of the Swiss hotel deal and Khan’s bank accounts,” he said. “We have submitted all supporting documents based on which the court has passed the order.”
http://www.livemint.com/2008/08/13004336/Swiss-hotelier-wins-1st-round.html
குறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 3, 2011
ராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்!
கருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].
காங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை!
ராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.
கொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].
கனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.
“ஹாட் அண்ட் கோல்ட்” சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும்! காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.
ராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது! அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம். ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது!.
© வேதபிரகாஷ்
02-02-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சோனியா, டெலிகாம் ஊழல், தேர்தல், நீரா ராடியா, போஃபோர்ஸ், மாலத்தீவு, முறைகேடு, ராகுல், ராஜா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
அமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஊழலுக்கு ஊழல், ஊழல், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், சண்முகநாதன், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சோனியா, சோனியா மெய்னோ, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, தியாகம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தேர்தல், தொகுதி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பேரம், மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராகுல், ராகுல் காந்தி, ராஜினாமா, ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 14, 2011
கடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது!
தமிழகத்தைஒப் பொறுத்த வரையில் சி.பி.ஐ ரெய்ட் சாதாரணமாகி விட்டது: தமிழகத்தில் துணைவேந்தர்கள் ஊழலில் ஈடுபடுவது என்பது சகஜமாகி விட்டது. சி.ஏ.ஜி, சி.பி.ஐ என எந்த அறிக்கை, சோதனை மற்றும் ரெய்ட் வந்தாலும் கவலையில்லை, யாரும் மாட்டிக் கொண்டு தண்டனைப் ப்ற்றததாகத் தெரியவில்லை. மாறாக, மேன்மேலும் பதவிகளைத் தான் பெற்று அனுபவித்து வருகிறார்கள். பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை[1], அண்ணா, என்று ஆரம்பித்து[2], சென்னை[3], புதுச்சேரி என்று பட்டிய்ல் உள்ளது. பாவம் அந்த பெயர்கள்.இதில் வேடிக்கையென்னவென்றால், பெத்தப் படித்தவர்கள், பெரியவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள்………………….என இருக்கும் இவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சந்தோஷத்தோடு சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள், விழாக்களில் பங்கு கொள்கிறார்கள், பட்டம்-பதை பெற்று வருகிறார்கள்…………..!
குறிப்பிட்ட புகார்கள் மீதான சோதனை: இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நன்றாக படிக்கும் மாணவர்கள் பலருக்கு இந்த பல்கலையில் இடம் கிடைக்காமல் போனது. ஆனால், சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால், அம்மாணவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் விசாரித்ததில், தனியார் ஆரம்பித்துள்ள நிறுவனங்களில் சேர்ந்து அதே படிப்பைப் படிக்கலாம், சான்றிதழ் கடல்சார் பல்கலைக்கழகமே வழங்கும் என்று உறுதி அளித்து சிலர் தங்களது நிறுவனங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், பணம் இல்லாத, மதிப்பெண் மட்டும் பெற்ருள்ளவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பல்கலை., நிதி முறைகேடு, சேர்க்கையில் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, தனியாருக்கு அனுமதி முதலியவை விஷயமாக பல புகார்கள் அடிப்படையில் குறிப்பாக[4] சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலை.,யில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த பல்கலை.,யின் துணைவேந்தர் விஜயன், கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி 8வது தெருவில் உள்ள அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது[5] / சோதனை நடத்தப்பட்டது[6].
தமிழகத்தில் ஒரே பல்கலை., இந்திய கடல்சார் பல்கலை., சென்னை நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் உள்ளது. தமிழகத்தில் இந்த ஒரு பல்கலை., மட்டுமே உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு 2008ல் முன்னர் துவக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பல்கலை.யில் நாட்டிகல் சயின்ஸ், மெரைன் இன்ஜினியரிங்., நேவல் ஆர்க்கிடெக் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் என இளம்நிலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளது. இங்கு தற்போது 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு இட ஒதுக்கீடு மற்றும் பணரீதியான செலவினங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனசெலவினங்கள் , கட்டடம் எழுப்புதல் ஆகியன அதீதப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளது[7].
எத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமல் படிப்புகள் ஆரம்பிக்க தனியாருக்கு அனுமதி அளித்தது: கடந்த இரண்டு ஆண்டுகளில், திடீரென்று, இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொண்டு, தனியார் பலர் மெரைன் இஞ்சினியரிங் முதலிய படிப்புகளில் வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம், எத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமலேயே, விஜயனுடைய ஆதரவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[8]. பல்கலையில் படிக்கவே ஆண்டுக்கு மூனறை லட்சம் செலவாகும் என்ற நிலையில், அதிகமாக பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சி.பி.ஐ, விஜயன் மற்றும் அவருடைய மனைவி முதலியோர் மேல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது[9].
வருமானத்திற்கு அதிகமான சொத்து மாத வருமானம் ரூ.80,000/-ஆனால் கோடி கணக்கில் சொத்து: வியாழக்கிழமை காலை (13-01-2011) வந்த சி.பி.ஐ.,யினர் ஆவணஙகள் நிலவரம் மற்றும் அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். கொட்டிவாக்கத்தில் உள்ள துணை வேந்தர் விஜயன் வீட்டிலும் சி.பி.ஐ.,யினர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துணைவேந்தர் விஜயன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும் இதன் அடிப்படையிலும் சி.பி.ஐ., விசாரித்து வருகின்றனர். இவரது மாத வருமானம் ரூ.80,000/- என்றிருக்கும்போது கோடி கணக்கில் இடத்தை வாங்கிப் போட்டுள்ளதாக ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த பல்கலை.,யில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பாராட்டும், பட்டமும் வழங்கும் விழா முடிந்து, துணைவேந்தர் இன்று டில்லி சென்ற நிலையில் சி.பி.ஐ.,அதிரடி விசாரணையை துவக்கி இருக்கிறது.
அரசியல் செல்வாக்கு உள்ள துணைவேந்தர்: டி. ஆர். பாலுவால் மூன்று வருடங்களுக்கு துணைவேந்தராக 2008ல் நியமித்தார்[10]. மத்திய அரசு இதற்கு 250 கோடிகள் நிதி வழங்கியுள்ளது. குறுகிய காலத்தில் பெரிய பதவிக்கு வந்தவர், பல அமைச்சர்களுக்குத் தெரிந்தவர், திமுகவில் வேண்டியவர்களுக்கு மிகவும் வேண்டியவர் என்ற நிலையில் உள்ளவர் பி. விஜயன். ஆகையால், ராஜாவைப் போலவே, சட்டப்படி எதையும் சந்திப்பேன் என்று உறுதியாக இருக்கிறாராம். இந்நிலையில் துணைவேந்தர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை சி,பி.ஐ,, கைது செய்யக்கூடும் என்ற யூகத்தில் முன்ஜாமீன் பெற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைய கடுமையான போராட்டத்தை மத்திய அரசு கடந்த ஆட்சியின்போது சந்தித்தது. இப்பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு லோக்சபாவில் தாக்கல் செய்ய முயன்றபோது திரினமூல் காங்கிரஸ் கட்சியினரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், பாலுவைத் தாக்கி மசோதாவைப் பறிக்க முயன்றது நினைனவிருக்கலாம்[11]. அந்த பல்கலைக்கழகத்தில்தான் இப்போது ஊழல் புகார் கிளம்பி ரெய்டு நடந்துள்ளது.
© வேதபிரகாஷ்
13-01-2011
குறிச்சொற்கள்:8வது தெரு, இட ஒதுக்கீடு, உத்தண்டி, ஏஜிஎஸ் காலனி, கடல்சார் பல்கலைக்கழகம், கொட்டிவாக்கம், சி.ஏ.ஜி, சி.பி.ஐ, டி. ஆர். பாலு, துணைவேந்தர், துணைவேந்தர்கள், நாகநாதன், பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை
அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமானம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் புகார், கடல்சார் பல்கலைக்கழகம், கருணாநிதி, கையூட்டு, கோடிகள் ஊழல், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், தாக்கீது, திமுக, நாணயம், நேர்மை, பாலு, பி. விஜயன், மாமூல், ரெய்ட், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 15, 2010
தலித் ராஜாவும், ஊழலும், நிலமோசடியும், நியாயப்படுத்தலும்!
தலித் தலித்துகளை அடிப்பது, நொறுக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது: தலித்துகள் தலித்துகளையே வித்தியாசமாக பாவிப்பது, தங்களுக்குள் நடந்து கொள்வது, அடக்கியாள்வது, முதலியவற்றைப் பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்[1]. சமூக ரீதியில் அது புதிராக இருக்கலாம், ஆனால், அரசியலில் சஜமாக, பணம்-பதவி வந்தால் அந்த தலித்தே “உயர்-ஜாதிக்காரன்” போல நடந்துகொள்வதை மற்ற தலித்துகள் நன்றாகவே பார்த்ததுள்ளனர், உணர்ந்துள்ளனர், அனுபவித்துள்ளனர்.
தலித் என்பதனால் ராஜா தாக்கப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார்: ராஜா ஒரு “தலித்” அதாவது எஸ்.சி சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால்தான், மற்ற சாதியினர் அவர்மீது ஊழல், மோசடி, நீதிபதியை மிரட்டுதல் என்று தாக்குதல் நடத்துகின்றனர் என்று கருணாநிதி, வீரமணி மற்ற திமுகவினர், அபிமானிகள் வக்காலத்து வாங்கி பேசினர், கூட்டம் போட்டனர்[2], பிரச்சாரம் செய்தனர். ஒருவேளை அந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கோ அல்லது கூட்டம் நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்தார்களோ அந்த ஆண்டவனுக்கு, இல்லை, பெரியாரின் ஆவிக்குத்தான்[3] தெரியும்!
விவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு அபகரித்ததாக ராஜா மீது விவசாயிகள் புகார்! ஆனால், இப்பொழுது ஏழைகள், விவசாயிகள், ஏன் தலித்துகளாக இருப்பவர்களே தமது நிலங்களை மிரட்டி குறைவான விலைக்கு வாங்கி விட்டு, அதை எம், ஆர், எஃப் போன்ற தொழிற் நிறுவனங்களுக்கு கோடிகளுக்கு விற்றுவிட்டனர். கேட்டால் எங்களை ராஜா மற்றும் சாதிபாட்சாவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்[4] என்று புகார் எழுந்துள்ளது. கோவிந்த ராஜு என்பவர் இவ்வாறு கூறுவதை டைம்ஸ்-நௌ தொலைக்காட்சி காட்டியது, செய்தியாகவும் வெளியிட்டுள்ளது[5].
“விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! இதையெடுத்து திமுக “ராஜா அவ்வாறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”, என்று கூறியுள்ளது[6]. ஒரு திமுக தலைவர், “ஏதாவது தவறு நடந்திருந்தால், நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”, என்றார். ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே அவ்வாறுதான் கூறியுள்ளார்கள்! அதே நேரத்தில் மற்ற மூத்த திமுக தலைவர்கள் கூறுவது என்னவென்றால், “விவசாயிகள் கேட்டதைவிட குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறாற்கள்! அதாவது, இன்னும் கொஞ்சம் அணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு அமைதியாகிவிடுவர் என்று பொறுளாகும்.
கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் – ராஜாவின் சம்பந்தங்கள்: விவசாய நிலங்களை, தனது மனைவியும், குடும்பத்தினரும் உறுப்பினர்களாக இருந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், மிகவும் அடிமாட்டுவிலைக்கு வாங்க உதவியதாக முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது[7]. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜாவுக்கு இப்போது சொந்த ஊரான பெரம்பலூரில் விவசாயிகள் மத்தியில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர்தான் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முன்பு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். ராஜாவின் அண்ணன் தற்போது இந்த நிறுவனத்தில் ஒருவராக உள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் மீதும், ராஜா மீதும் கிட்டத்தட்ட 250 விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் எங்களிடமிருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கியது. ஆனால் மார்க்கெட் விலையை விட 3 முதல் 17 சதவீதம் குறைத்தே விலை கொடுத்தனர். இதற்கு ராஜாதான் காரணம். அவரது நிர்ப்பந்தத்தால்தான் அடி மாட்டு விலைக்கு எங்களது நிலத்தை விற்க நேரிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
எஸ்.சி / எஸ்.டஇ சட்டமே மிரட்டுவதற்கு உபயோகப்படுவது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செல்லத்துரை கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நெருக்குதல் கொடுத்தார் ராஜா. செந்தில் என்ற விவசாயி 3.5 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவரது நிலத்தைப் பறிக்க முடிவு செய்த ஆளுங்கட்சியினர், அவர் மீது பொய்யான வழக்கைப் போட்டுக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். அதாவது எஸ்.சி/.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மிரட்டியதுதான் வேடிக்கை, ஆனால், உண்மை. பின்னர் வழக்கைக் கைவிட வேண்டும் என்றால் நிலத்தை விற்குமாறு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி செந்தில் நிலத்தை விற்றார் என்றார்.
எம்.ஆர்.எப் நிலைத்தை வாங்குவது: கடந்த 2007மாவது ஆண்டு பெரம்பலூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர்.எப் ஆலைக்காக தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் எம்ஆர்எப் நிறுவனம் அக்கம் பக்கத்தில் உள்ள 439 ஏக்கர் விவசாய நிலங்களை புரோக்கர்கள் மூலம் வாங்கிக் குவித்தது. இந்த நிலையில், எம்ஆர்எப் நிறுவனத்திற்காக 430 ஏக்கர் நிலங்களைப் பெற்றுத் தருவதாக கூறி அந்த நிறுவனத்துடன் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஏக்கருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விலை கொடுத்து 200 ஏக்கர் நிலங்களை தானே வாங்கி தானே வைத்துக் கொண்டது. அப்போது ஒரு ஏக்கரின் உண்மையான மதிப்பு ரூ. 18 லட்சம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எம்ஆர்எப் நிறுவனத்திற்காகத்தான் தங்களது நிலங்களை விற்கிறோம், நிலத்தைக் கொடுத்தால் வீட்டுக்கு வேலை ஒன்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் சொன்னதை நம்பி, குறைந்த விலையாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் விற்றோம். ஆனால் கிரீன்ஹவுஸ் நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.
அரசு நடவடிக்கை எடுப்பது, விசாரணை செய்வது – வழக்கம் போல[8]: இந்த சர்ச்சை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், இரு தனியார் நிறுவனங்களுக்கிடையிலான விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. இருந்தாலும், மோசடி நடந்திருப்பதாக விவசாயிகள் உணர்ந்தால், உடனடியாக கிரிமினல் புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். போலீஸ் தரப்பில், மஹேந்திர ராத்தோர் “இது வரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை”, என்று கூறுகிறார். இதற்குள் இதை விசாரிக்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது[9]. அரசு நடவடிக்கை எடுப்பது என்பது ஊழலை மறைக்கத்தான் என்பது தெரிந்த விஷயமே[10]. இதைப் போலத்தான் சோனியாவும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது[11]. எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும்[12], நாளைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை, அதுதான் இது என்று மெய்பிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார்கள். சோனியா குரோச்சியைக் காக்கமுடியும் என்றால், கருணாநிதியால் ராஜாவைக் காக்க முடியாதா?
வேதபிரகாஷ்
© 15-12-2010
[1] வேதபிரகாஷ், தலித் – சித்தாந்தம், பிரச்சினை, அரசியல், http://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/
Vedaprakash, Dalit – Precept, Problem and Politics, Published in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114.
http://vedaprakash.indiainteracts.in/2007/09/06/dalit-%E2%80%93-precept-problem-and-politics/
[2] விடுதலை நாளிதழில் பார்க்கவும். கடந்த மாதம், தி.நகரில் கூட கூட்டம் போட்டார்கள்.
[3] கருணாநிதி ஒரு தடவை கேள்வி கேட்டபோது, பெரியார் ஆவிக்குத்தான் தெரியும், கேட்டுப் பாருங்கள் என்றார்!
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆர். பி. பரமேஷ் குமார், ஏ. எம். சாதிக் பாட்சா, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தலித், பரமேஷ் குமார், பரமேஸ்வரி, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்
2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆர். பி. பரமேஷ் குமார், ஆர். ராம்கணேஷ், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு ரெய்ட், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 8, 2010
ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன!
ஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன! அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.
அது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].
பெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].
ஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
நவம்பர் 23, 2010
பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்?
ஆ. ராசா – நீரா ராடியா உரையாடல் ஆடியோ
First Published : 21 Nov 2010 01:09:58 PM IST; Last Updated : 22 Nov 2010 02:51:28 PM IST in Dinamani.
ஆ. ராசா – நீரா ராடியா உரையாடல்
22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்
ஆடியோ கேட்க
நீரா: ஹலோ?
ராசா: ராசா பேசுகிறேன்.
நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.
ராசா: ஆ?
நீரா: பர்கா தத்
ராசா: அவர் என்ன சொல்கிறார்?
நீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக…. அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.
ராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.
நீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.
ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.
நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?
ராசா: ஆ?
நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…
ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: தனியாகவா?ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.
நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?
ராசா: ஆம்.
நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.
ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…
22.5.2009 மதியம் 2 மணி 29 நிமிடம் 41 விநாடிகள்
நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?
ராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்?
நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.
ராசா: ம்ம்…
நீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்… நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.
ராசா: ம்ம்.
நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….
ராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்…
நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?
ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…
நீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.
ராசா: ம்ம்.
நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.
ராசா: ஓஹோ! ஓஹோ!
நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…
ராசா: ம்ம்.
நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…
ராசா: ஓ…
நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
24.5.2009 காலை 11 மணி 5 நிமிடம் 11 விநாடிகள்
நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.
நீரா: தெரியும் அல்லவா?
ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.
நீரா:ம்ம்..
ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.
ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…
நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?
ராசா: எனக்குத் தெரியாதே.
நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.
ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…
நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.
ராசா: ஆ, இருக்கலாம்–
நன்றி: அவுட்லுக், Dinamani
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, நெப்பொலியன், பாலு, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்
1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், நீரா ராடியா, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாம் ஆயில் ஊழல், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, வீர் சிங்வி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »