Archive for the ‘கபில்’ Category
திசெம்பர் 16, 2011
சிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….
சிதம்பரத்திற்கு தெரிந்த ரகசியம் – வழக்கறிஞர் வெர்சஸ் உள்துறை அமைச்சர்: திரு அரவிந்த ரே என்ற தில்லி கமிஷனை மற்றும் முதன்மை காரியதரிசிக்கு எழுதப்பட்டுள்ள 09-05-2011 தேதியிட்ட கடிதத்தில், “இந்த விஷயம் உள்துறை விவகார அமைச்சகம் நன்றாக பரிசோதிக்கப்பட்டது. சட்ட விச்வகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தின் பரிந்துரை / ஆலோசனையின் படி, முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 மற்றும் 148/2002 முதலியவை மறு-பரிசீலினை செய்யப்பட்டு, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தேசித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உள்துறை அமைச்சர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்படுகிறது”, என்றுள்ளது.

வழக்கறிஞராக உதவும் சிதம்பரம்: திரு எஸ்.பி.குப்தா, சேர்மேன், சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களின் முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 (கன்னாட் பிலேஸ் போலீஸ் ஸ்டேஷன்) மற்றும் 148/2002 (டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷன்) மீதான மனுவின் பரிசீலினை என்பதப் பற்றி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சிதம்பரத்தின் “கிளையன்ட்” நேரிடையாகவே மனு செய்துள்ளார். உடனே அவரது பழைய வழக்கறிஞர், இப்பொழுது உள்துறை அமைச்சராக உதவி செய்ய முனைந்து விட்டார் என்ரு தான் உறுதியாகிறது.

எம்.பி எழுப்பியுள்ள கேள்விகள் – சிங் வெர்சஸ் சிங்: 10-12-2011 அன்று யஷ்வீர் சிங் என்ற எம்.பி, மன்மோஹன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழ் கண்ட வினாக்களை எழுப்ப்பியுள்ளார்:
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மேன், எஸ்.பி.குப்தா இவர்களுக்கிடையில் இருந்த / உள்ள சம்பந்தம் / தொயர்பு என்ன? [Was / Is there any connection between the Home Minister and S.P. Gupta of Sunair Hotels?]
- சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டபோது, உள்துறை அமைச்சகம் தவறான விஷங்களை / உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கொடுத்து கருத்து கேட்டதா? [While asking for the opinion of the Law Ministry, did the Home Ministry give wrong facts?]
- உள்துறை அமைச்சர் சிதம்பரம் குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.குப்தாவிற்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினாரா? [Did the Home Minister represent the accused S.P. Gupta in litigation with VLS Finance Limited?]
- அப்படியென்றால், உள்துறை அமைச்சர் கடந்த எட்டு வருடங்களாக கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் வரை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள புலன் விசாரணை செய்யும், விசாரிக்கும், தண்டிக்கப் பரிந்துரை செய்த அதிகாரிகள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று தீர்மனிக்கிறாரா? , [Did the Home Ministry conclude in eight years that all the investigating and prosecuting officials in the trial court, high court and the Supreme Court were corrupt? ]
- அதெப்படி எஸ்.பி.குப்தா தமது மிரட்டல் கடிதங்களில் எழுதப்பட்டுள்ள அதே பாஷயை உபயோகித்து, உள்துறை அமைச்சகம் தில்லி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது? [What was the conspiracy hatched between S. P. Gupta and Home Minister……language used in their aggressive letters to Delhi Police, Delhu State, …………………..Ministry used the same langusge, which was previously used by the accused……………….].
வேதபிரகாஷ்
16-12-2011
குறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆலோசகர், உள்துறை அமைச்சர், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கலால், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சட்டம், சிதம்பரத்தின் அவதாரங்கள், சுங்கம், நிதியமைச்சர், நீரா ராடியா, நேர்முக வரி, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மறைமுக வரி, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், வக்கீல், வரி, ஸ்பெக்ட்ரம் ஊழல்
அத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், இழுக்கு, உள்துறை, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், கனிமொழி, கபில், கபில் சிபல், கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கலாநிதி மாறன், கலால், கூட்டணி, கூட்டணி ஊழல், சட்ட நுணுக்கம், சட்டம், சி.பி.ஐ, சுங்கம், டாடா நிறுவனம், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நிதி, நிதித்துறை, நீதி, நீரா ராடியா, நேர்மை, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், போஃபோர்ஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராம் லீலா, ராம்தேவ், லஞ்சம், வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 1, 2011
காணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு!
அன்னாவிற்குப் பிறகு மறுபடியும் ராம்தேவ்: ராம்தேவை மிரட்டியது போலவே, அன்னனவையும் முதலில் மிரட்டிப் பார்த்தது அரசு. பிறகு ஒருவழியாக அன்னா உண்ணாவிரதம் இருந்து சென் று விட்டார். அன்னா ஹஸாரே வீட்டிற்குச் சென்றவுடன், ஊடகங்கள் அடங்கி விட்டன. ஆனால் மெல்வதற்கு ஏதாவது வேண்டுமே? காங்கிரஸாலும் சும்மயிருக்க முடியாது தான். இதோ அவர்களின் குறை தீர்க்க பாபா ராம்தேவ் மாட்டிக் ஒண்டு விட்டார்.
பாபா ராம்தேவ் டிரஸ்ட்டுகள் மீது நடவடிக்கை: பாபா ராம்தேவின் டிரஸ்ட்டுகள் – பதஞ்சலி யோகபீடம், திவ்யா யூக மந்திர், பாரத் ஸ்வபிமான் முதலியவை[1] அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பணம் பற்றுள்ளதாக அமுலாக்கப் பிரிவு துறையினரால் வழக்குப் போடப்பட்டுள்ளது[2]. ரூ.7 கோடி இங்கிலாந்திலிருந்து பெற்றதாக, அயல்நாட்டு செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், லிட்டில் கும்ப்ரே தீவைப் பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது[3]. பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். முன்னர் அவரது சீடர் சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சானிதழ் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக சி.பி.ஐ கண்டு பிடித்துள்ளது.
டிரஸ்ட்டுகளின் தரப்பில் கூறப்படுவது: டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், சட்டப்படி தங்கள் நிறுவனங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது, என்றார்[4]. “அரசிற்கு முன்னமே இவ்விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் கேள்வி கேட்டார்[5].
திடீர்-திடீர் நடவடிக்கைகள் ஏன்: இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்படி எடுக்கப்படுகின்றனவா இல்லை, பாபா ராம்தேவை மிரட்டுவதற்காகவா, இல்லை அன்னா ஹசாரேவை மறைமுகமாக மிரட்டாவா என்பது கூடிய சீக்கிரத்தில் தெரிய வரும். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை சட்டரீதியாக செய்யப் பட்டுள்ளன. ஆகையால் அவற்றை அந்த டிரஸ்ட்டுகள் எதிர்கொள்ளும். ஆகவே சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருவது ஒன்றும் புதியது அல்ல. ஏனெனில் கம்பனிகள் பதிவு செய்யும் பொழுது அவ்விவரங்கள் கொடுத்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, திடீர்-திடீரென்று குறிப்பிட்ட நாட்களில் விழித்துக் கொண்டு, ஏதோ வேகமாக வேலை செய்வது போல அரசு துறை நிறுவனங்கள் முடுக்கிவிடப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.
வேதபிரகாஷ்
01-09-2011
குறிச்சொற்கள்:அண்ணா, அந்நிய செலாவணி, அன்னா, அன்னா ஹஸாரே, உண்ணாவிரதம், உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கம்பெனி, கோடிகள் ஊழல், டாக்டர் வேத் பிரதாப் வைதிக், டிரஸ்ட், டெலிகாம் ஊழல், பதிவு, பாபா, பாபா ராம்தேவ், பிரதாப் வைதிக், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், வேத் பிரதாப் வைதிக்
அத்தாட்சி, அறப்போர், ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கபில், கபில் சிபல், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, கோடி, சக்தி, சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், பலிக்கடா, பாபா, பாபா ராம்தேவ், ராம் லீலா, ராம்தேவ், வரி ஏய்ப்பு, வருமானம், வருவாய் துறையினர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 31, 2011
கபில் சிபலுக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்: செக்காக அனுப்பி வைக்கப்பட்டது!
கபிலுக்கு ஒரு லட்சம் லஞ்சம் செக் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது: மத்திய மனித மேம்பாட்டு வள அமைச்சர், பேச்சில் பெலே கில்லாடி, ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிப்பார். அவரது மகன் – அகில் சிபலோ, தீவிரவாதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துபவர்[1] (நிர்வாண ஓவியர் ஹுஸைனுக்கும் வக்கீல் இந்த அகில் தான்). இந்நிலையில், ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் தாளாளராக / துணை-தாளாளராக[2], ஒருவருக்கு நியமனம் செய்ததற்கு, ராஞ்சியிலிருந்து ஓம் பிரகாஷ்[3] / உமேஷ்[4] என்பவரின் பெயரில் ரூ. ஒரு லட்சத்தை தில்லியிலுள்ள கனரா வங்கியில் பெறுவதற்கு வசதியாக செக் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செக் எண்.361296, ஆகஸ்ட் 26, 2011 தேதியிட்டது. அச்செக், ஒரு கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[5]. உண்மையில் அக்கடிதத்தில் தம்மை நியமனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இது வேடிக்கைக்கு செய்யப்பட்டதா அல்லது அத்துறையில் உள்ளவர்களுக்கு தூண்டில் போட மேற்கொண்ட முயற்சியா என்று தெரியவில்லை[6].
வேவு பார்த்தவருக்கே வேவு பார்த்த ஆசாமி: கபில் சிபல் ஒரு அழுத்தமான ஆள், சிரித்துக் கொண்டே மனத்தில் வஞ்சத்தை வைத்துள்ள பேர்வழி. இவ்விஷயத்தில் சிதம்பரத்தையும் மிஞ்சக்கூடியவர். சமீபத்தில் அன்னா ஹசாரே விஷயத்தில் அக்னிவேஷை ஒற்றரைப் போல உபயோகப் படுத்தியவர். அதாவது, அக்னிவேஷ், கபிலுக்கு போன் மூலம் நடப்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். பாபா ராம்தேவ் விஷயத்திலும், அக்னிவேஷ், சிபலுடன் பேசிக்கொண்டிருந்தார் என்பது நினைவு கூர்தல் வேண்டும். ஊழல் ஒழிப்பு மசோதா விஷயத்தில், அன்னா ஹசாரே குழுவிற்கு எதிராகக் கருத்துகளை கூறியுள்ளார்.
தப்பித்துக் கொள்ள போலீஸாரிடம் புகார் செய்துள்ள கபில்[7]: மற்ற விஷயங்களில் வீராப்பாக பேசும் கபில், இந்த விஷயத்தில் தன்னுடைய அந்தஸ்த்தையும் விடுத்து, போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். அதிலும் தன்னுடைய அலுவலக அதிகாரிகள் மூலம் தில்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. “ஆதாயத்தை பெறும் வகையில் தான் அந்த கடிதம் மற்றும் செக் அனுப்பி வைக்கப்பட்டுள்ள்ன. அமைச்சரகத்தில் இப்பிரச்சினை தீவிரமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது”, என்று அமைச்சரக தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி அமித் காரே கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்:அகில், அகில் சிபல், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஒரு லட்சம், கபில், கபில் சிபல், செக், செக் மூலம் லஞ்சம், ஜார்கண்ட், தாளாளர், பல்கலைக்கழகம், மாமூல், லஞ்சம், ஹுஸைன்
அகில், அரசு ஊழியர், ஊழலுக்கு ஊழல், ஊழல், கபில், கபில் சிபல், செக், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »